ஆலயமும் அறிமுகமும்
யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானியின் கீழ் பரராஜசேகர மகாராஜவின் கட்டளைப்படி பரராஜசேகர மகாராஜவின் அரச சபை பிரதிநிதியாக விளங்கிய ஸ்ரீ சூரியமூர்த்தி தம்பிரான் பரம்பரை வழி வந்தோர் சிவஞானம் சிவக்கொழுந்து ஓதுவார் வழிவந்த திரு ஆனந்தம் கனகசபை அவர்களால் பராமரிக்கப்பட்டு வழிபடப்பட்டு வரும் ஆலயம். இவ் ஆலயம் யாழ்ப்பாண மாநகரில் நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கல்வியங்காட்டில் ஸ்ரீ நடராஜ முக்குறுனிப் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் ஸ்ரீ சிதம்பரேஸ்வர் தலமாகிய கோவில்களுக்கு எல்லாம் கோயில் ஆக அமைந்த சிதம்பர நடராஜர் சந்நிதியில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள நடராஜ முக்குறுனிப் பிள்ளையார் கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்ரீ நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் மூல மூர்த்தியாக விளங்குகிறார். இவ் ஆலயத்தை நிர்மானித்து பராமித்து வந்த சிவஞானம் ஓதுவார் சிவக்கொழுந்து ஓதுவார் இவர்கள் இவ் ஆலயத்தை பராமரித்தலையும் நல்லைக் கந்தன் ஆலயத்தில் தேவாரம் ஓதும் வழக்கத்தையும் தவப்பணியாக கொண்டு இருந்தார்கள். இவ் ஆலயம் மிக பழமை வாய்ந்த ஆலயம் ஆகும் முற்பட்ட காலப்பகுதியில் பரராஜசேகர மகாராவின் கட்டளைப்படி அமைக்கப்பட்ட ஆலயம் கற்கோவில் ஆக அமைந்து காணப்பட்டது பின்னர் சிவக்கொழுந்து ஓதுவார் காலப்பகுதியில் இக்கோவில் புனர்நிமானம் செய்யப்பட்டு
மூலஸ்தானம் அர்த்தமண்டபம் கற்கோவில் ஆகவும் மகாமண்டபம் ஸ்நவன மண்டபம் ஸ்தம்பமண்டபம் வசந்த மண்டபம் கோபுர வாசல் இவைகள் நிர்மானிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கனகசபை ஐயா காலப்பகுதியில் இக் கோவிலின் ஆரம்ப காலத்தில் இருந்தே இக் கோவில் கோபுர வாசலுக்கு என நிர்மானிக்கப்பட்ட நூதன சிற்ப ஆசன கல் நீண்டகாலமாக செதுக்கப்பட்டு கோபுரவாசலின் மேல் வைக்கபடாமல் காணப்பட்டது 2005ம் ஆண்டு காலப்பகுதியில் கோபுர வாசல் விஸ்தரிக்கப்பட்டு ஆசனக்கல் பிரதிஸ்டையும் இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் முருகப்பெருமான் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் நாகதம்பிரான் பழனி முருகன் ஆகிய பரிவார மூர்த்திகள் எழுந்து அருள் பாலித்து வருகிறார்கள்.
இவ் ஆலயத்தில் மாதம் இரு சதுர்த்தி மகா சதுர்த்தி திருவொம்பாவை திருப்பள்ளியெளிச்சி பிள்ளையார் கதை நடேசர் அபிஷேகம் கார்த்திகை தீபம் புதுவருடப்பிறப்பு தைப்பொங்கல் மற்றும் மணவாளக்கோல நிகழ்வுகள் இடம்பெறும்...
செவிவழி வந்த தகவல் ஸ்ரீ நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் ஆலயத்தில் சிவஞானம் ஓதுவார் காலத்தில் இரு மாட்டு வண்டிகள் பிணைக்கப்பட்டு அதிலே தேர் செய்யப்பட்டு முக்குறுனிப்பிள்ளையார் வீதியுலா வந்ததாக ஆவ்வூர் வாழ் மக்களின் செவிவழிவந்த தகவல் ஆகும் மேலும் சிவக்கொழுந்து ஓதுவார் காலப்பகுதியில் வெகு விமர்சையாக மானம்பூதிருவிழா இடம்பெற்றுவருவதாகவும் மேலும் ஸ்ரீ வேளாதோப்பு முத்துமாரி அம்மன் நடராஜ முக்குறுனிப்பிள்ளையார் ஆலய முன்றலில் வேட்டைத்திருவிழாவிற்கு வருவதாகவும் ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன்
குறிப்பு:- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சந்நிதி மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதி மற்றும் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் முக்குறுனிப்பிள்ளையார் ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Introduction of Temple
Under Part iracatani pararajacekara makaraja open court, represented by the orders of Sri Suriyamurtti tampiran pararajacekara makaraja maintained by Mr.civananam civakkoluntu otuvar the temple of the Order. Divisional Secretariat, Nallur Temple in Jaffna under the city kalviyankadu Ganesha temple in the Sri nadaraja mukkuruni located on the road. Here in India, as the temple of all temples in Sri citamparesvar Chidambara Nataraj temple deity Ganesha nadaraja mukkuruni located in the entourage to be drawn from Murthy Shree Murthy nadaraja mukkuruni pillayar remains raw. The temple and the temple otuvar civakkoluntu otuvar civananam assign the maintenance of good paramittu kantan tavappani with temple tradition otum were destructive. This temple is the oldest temple in the preceding period as karko pararajacekara Maharaj Temple is built on the orders found in the temple during later otuvar civakkoluntu been reconstruction main hall,sub hall, Hall Tower in the spring entrance hall which has been reopen.This nakatampiran Palani Murugan Temple of Shiva at the entourage nataraja sivakama Sundari Polyethylene grace coming up.
This temple is the story of Ganesha Chaturthi natecar tiruvompavai Chaturthi Maha Abhishekam Karthika Deepam taipponkal and manavalakkola events featuring New Year ...
Auditory messages Sri nadaraja Mukkuruni Pillayar church civananam otuvar the two bullock carts, tied also the choice of the Mukkuruni Pillayar vitiyula came avvur inhabitants of the cevivalivanta Information is also civakkoluntu otuvar period very critically and Sri velatoppu muttumari Amman nataraja Mukkuruni Pillayar Temple l being authentic, the source said
http://www.kalviyankadu.tk/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக